2012 ஆம் ஆண்டு உங்களுக்கு தேவ சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவருவதாக, கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் சபைகளிலும், உங்கள் வீடுகளிலும் நிறைந்திருப்பதாக. ஆமேன்.
(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக் காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள்.
வேதாகமத்தில் பல உடன்படிக்கைகள் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்டதையும் அதனை மேற்கொண்டு நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளையும் அவை முறிவடைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அவதானம் செலுத்துவோமாக.
1. பஸ்காவுக்காவுக்கான ஆயத்தம்:
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.(Matt 26:18 அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.Matt 26:19 இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். Read more »
நியாயப்பிரமாணம் என்பது நன்கு ஏற்பாடுசெய்யப்பட்ட சட்ட ஒழுங்குகள் மூலம் ஒரு சமுதாயத்தை ஆட்சிசெய்தலாகும் . வேதாகமத்தில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒரு சிறந்த நியாயப்பிரமாணங்கள் கர்த்தரினால் தனது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டன. அவற்றின்நோக்கம்..
1. கர்த்தரைஆராதனை செய்வதற்கும்,
2.கர்த்தருடன் தொடர்பு கொள்வதற்கும்
3.,ஒருவரோடொருவர் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் Read more »
மனிதர்களுடன் விஷேடமாக அவரால்தெரிவுசெய்துகொள்ளப்பட்ட இஸ்றவேல்சந்த்தியுடன். இறைவன் கொண்டுள்ள தொடர்பில் ஒருபெரிய இடைவெளி சரித்திரத்தில் காணப்படுகிறது… மனிதர்களின் விடயங்களில் தெய்வீக நிர்வாகத்தில் மாற்றங்கள் அவதானிக்க்க்படுகின்றது.
வேதாகமத்தில் காணப்படும் காலங்களை நாம் கண்டறிதல் வேண்டும். மனிதசரித்திரத்தை கர்த்தர் காலங்களாக வகுத்துள்ளார். தன்னுடைய குமாரனாகிய கிறிஸ்துமூலமாக காலங்களை வகுத்துள்ளார். அதாவது இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; ,இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார்,, இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.( எபிரே 1:2) காலங்கள் நீண்டதாகவோ அல்லது குறுகினதாகவோ காணப்படலாம், ஆனால் நாம் பகுத்தறியவேண்டியது எப்படி மனிதகுலத்துடன் கர்த்தர் உறவாடுகின்றார் என்பதேயாகும். Read more »