விசுவாசம் இரட்சிப்படைவதற்கு மிகமிக அவசியமானதாகும்.ஏனெனில் வேதாகமத்தில் நற்கிரிகைகளினால் இரட்சிப்படைய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நான் சொல்லப் போகும் கதையைக் குறித்து ஒரு வரும் தவறாக விளங்கக் கூடாது.ஒரு ஊழியக்காரன் பிரசங்கம் செய்வதற்குப் போனார். தனது பாதையில் அவர் நடந்து செல்லும்வேளையில் ஒரு மலையில் ஏறினார். அதன்கீழ் கிராமங்கள் காணப்பட்டன .அதன்னருகே காணப்பட்ட வயல்நிலங்கள் சூரிய ஒளியில் மிகவும் அழகாக காட்சிப்படுத்தியது.
Archive for June, 2010
மதுவும் அதன் தீமையும்
புளிக்கவைத்த திராட்சைப்பழச் சாறும் வேறு பழங்களின் சாறும் மதுபானம் கொண்ட குடிவகையாகும். பழைய காலங்களில் திராட் சரசம் ஒரு முக்கிய குடிவகையாகும்.யேசுக்கிறிஸ்துவின் உவமை களில் இது முக்கியம் பெறுகிறது அத்துடன் சுவிஷேசங்களிலும் இது கூறப்படுகின்றது.
திராட்ச ரசம் என்று வேதாகமத்தில் கூறப்படுவதெல்லாம் புளிக்க வைத்த திராட்சரசம், அதில் மதுபானம் அடங்கியுள்ளது. புளிக்க வைக்காத திராட்சபழச் சாறு திராட்ச ரசம்(வைன்) என்று அழைக் கப்படுவதில்லை. புதிய திராட்சப்பழச் சாறு மிக அண்மையில் [...]
உபவாசம்
உபவாசம் என்பது ஒருவர்சிறிதளவு உணவையோ அல்லது உணவிண்றியோ, விருப்பியோ அன்றி அவசியதேவைக்காகவோ இருத்தலாகும். மருத்துவதேவைக்காக உண வைக்குறைத்து தேவையற்ற உணவுகளை வெளியேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.
மறுபக்கத்தில், ஆவிக்குரிய உபவாசம் என்பது, சாப்பிடும் உணவின்வகைகளின் அளவைக் குறைப்பதாகும். இதன் அர்த்தம் செய்யும் தொழில்பாடுகளின் அளவைக் குறைத்து அதற்குரிய நேரத்தை ஜெபத்திலும் தியானத்திலும் வேதவாசிப்பிலும் செலவிடுதலாகும். புதியஏற்பாட்டு வசனங்கள் “உபவசம்” என்பது சாப்பாடின்றி இருத்தல் என்றுபொருள்படும்.மூன்றுவிதமான உபவாசங்கள்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நத்தார் பண்டிகை
கிறிஸ்துவின் பிறந்த நாளை டிசமபர் 25 இல், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடிவருகின்றோம். கிறிஸ்துவே எங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்று அவரை அழைக்கிறோம். இந்த நாட்களில் இயேசுக்கிறிஸ்துவை நாம் மேலும் அறிந்து கொள்ளும் வண்ணமாக இந்தக் கட்டுரையை வரைந்துள்ளேன் வாசித்துப் பயன்பெறுவீர்களாக. அனைத்து வாசகர்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்சியடைகிறேன்.
கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்.
கர்த்தருக்குக் கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.( உபாகமம்.4:30,11:132தானி.7:27,அப்5:29) விஷேடமாகஅவருடையவார்த்தையைக்கேட்டுஅதன்படிசெய்யும்படிகேட்கிறது.( யாக். 1:22)
கர்த்தர்மேல் நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே கீழ்ப்படிதலாகும்.(1யோவான்.2: 3-4)கர்த்தரை நாம்நேசித்தால் , அவருக்கு நாம் ஊழியம்செய்ய விரும்புவோம். அத்துடன் அவருக்கு ஊழியம்செய்யும்போது , அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய விரும்புவோம். கீழ்படிதலின்வெளிப்பாடாக, கர்த்தரை ஆழமாகநேசிக்கிறோம் என்பதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக , எங்களை முழுவதும் அர்ப்பணம்செய்கிறோம்.



Posted in



